உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த கோழிகளை படத்தில் காணலாம்.

வள்ளியூர் அருகே 250-க்கும் மேற்பட்ட இறந்த கோழிகளை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்கள்

Published On 2023-02-03 09:18 GMT   |   Update On 2023-02-03 09:18 GMT
  • வள்ளியூர் அருகே உள்ள வடமலையான் கால்வாயில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.
  • இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது ஆ.திருமலாபுரம். இந்த ஊருக்கு வெளிப்புறத்தில் வடமலையான் கால்வாய் உள்ளது. இதில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.

இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசி, அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கால்வாயில் இறந்த கோழிகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இந்த கோழிகள் நோய்கள் தாக்கி இறந்ததால் அதனை இங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

இறந்த கோழிகளால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக சுகாதார துறையினர் கோழிகளை அகற்றி அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News