உள்ளூர் செய்திகள்
காசிமேடு கடலில் படகு போட்டி அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
- போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராயபுரம்:
காசிமேட்டில், வண்ணாரப்பேட்டை போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசிமேடு கடலில் படகு போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
இதனை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் இளைய அருணா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
கிரிக்கெட் மற்றும் படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் சிவா, இயக்குனர் விக்னேஷ்ராஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.