உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய சிறுவர்-சிறுமிகள்.

பாளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

Published On 2023-02-12 09:07 GMT   |   Update On 2023-02-12 09:08 GMT
  • ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நெல்லை:

சுற்றுச்சூழலை பாதுகாத்திட வலியுறுத்தியும், விபத் துகளை தவிர்த்திடவும், பொது போக்குவரத்தை பலப்படுத்தவும் விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டி அண்ணா விளை யாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஆயிரம் பேர்

அரசு போக்குவரத்து மற்றும் விரைவு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கான போட்டியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நாறும்பூநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்்.

முதல் பரிசு ரூ. 5 ஆயிரம்

ஆண்கள் மற்றும் பெண் கள் பிரிவில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியினை தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யா, உடற்கல்வி ஆசிரியர் கள் மற்றும் அரசு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ஜோதி, மாநில துணைத் தலைவர் செண்ப கம், மாவட்ட தலைவர் பீர்முகமது ஷா, மாவட்ட செயலாளர் முருகன், பொரு ளாளர் ராஜன் மற்றும் அரசுப்போக்குவரத்தில் செயல்படும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான பாது காப்பு ஏற்பாடுகள், போக்கு வரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகளை பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் செய்திருந்தனர்். முடிவில் அரசு போக்கு வரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News