உள்ளூர் செய்திகள்

சிறுதானிய விழிப்புணர்வு முகாம்

Published On 2023-01-01 15:15 IST   |   Update On 2023-01-01 15:15:00 IST
  • கலந்துரையாடல் மற்றும சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • உழவர் உற்பத்தியாளர் குழு முன்னேறுவதற்கான தேவவயான வழிமுறைகள் கூறினார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் பொருட்டு, விவசாயிகள் உற்பத்தி குழுவுடன் கலந்துரையாடல் மற்றும சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகையில், வேளாண் உற்பத்தி குழுவில் உள்ள உறுப்பினர்கள், தங்களுக்கு தேவையான தொழில்நுட்பகளை 2023 உலக சிறுதானிய ஆண்டாக உள்ளதால், சிறுதானியம் சாகுபடி செய்வதோடல்லாமல் அதனை மதிப்பு கூட்டி அதிக லாபம் பெற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், வேளாண்மை அறிவியல் முதுநிலை விஞ்ஞானி மற்றும் முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ் பங்கேற்று, வேளாண் பெருமக்கள் இயற்கை வேளாண்மையை கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு ரசாயனத்தை பயன்படுத்த வேண்டும். உழவியல் பேராசிரியர் சிவக்குமார் கலந்துகொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழு முன்னேறுவதற்கான தேவவயான வழிமுறைகள் கூறினார்கள்.

மண்ணியல் இணை பேராசிரியர் சங்கீதா கலந்துகொண்டு, மண்வளத்தை பாதுகாத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.

விஞ்ஞானி பூமதி, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விவரித்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில், உற்பத்தி குழுவில் செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் தலைவர் பெரியண்ணன் கலந்துகொண்டு, ஸ்ரீமதி உழவர்கள் உற்பத்தி குழுவின் ஆண்டு அறிக்கையை விவரித்தனர்.

Tags:    

Similar News