உள்ளூர் செய்திகள்

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு பால், பிஸ்கட்

Published On 2023-02-04 05:43 GMT   |   Update On 2023-02-04 05:43 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கயம் :

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு தைசப்பூசத்தையொட்டி திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை என பல மாவட்டங்களில் இருந்து குழுக்கள், குழுக்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை தைப்பூசம் என்பதால், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூர், காங்கயம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு த.மு.மு.க., கோம்பை தோட்டம் கிளை சார்பில் டீ, காபி, பால், பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News