உள்ளூர் செய்திகள்

மேட்டூர் சின்ன பார்க் அருகே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை படத்தில் காணலாம்.

மேட்டூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2022-10-19 09:22 GMT   |   Update On 2022-10-19 09:22 GMT
  • மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர்.
  • சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர்:

மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளம் வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News