உள்ளூர் செய்திகள்
- சிவலிங்கம் மேஸ்திரி தொழில் செய்து வந்தார்.
- ரெயில் மோதி சிவலிங்கம் பலியானார்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமி பேட்டை தெற்கு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 37). மேஸ்திரி தொழில் செய்து வந்தார்.
நேற்று இரவு குமாரசாமிபேட்டை அருகில் உள்ள ரெயில்வே லைனை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரெயில் மோதி சிவலிங்கம் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி ரெயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.