நங்கவரத்தில் கருணாநிதிக்கு நினைவு சின்னம்- அமைச்சர் தகவல்
- விவசாயிகளுக்கு ஆதரவாக கலைஞரின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது.
- கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிட வேண்டியது.
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான குளித்தலை தொகுதியில் 1957ல் விவசாயிகளுக்கு ஆதரவாக நங்கவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கேயே 10 நாட்கள் தங்கி விவசாய மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாகவும், இன்றும் விவசாயிகள் கலைஞரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நங்கவரத்தில் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு முன்வருமா எனவும், இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிட வேண்டியது.
விவசாயிகளுக்கு ஆதரவாக கலைஞரின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும், நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.