உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம்
- வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இதில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், எண்டப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர்.
இதில் கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்ரே ஸ்கேன், ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசு மருத்துவ பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் சின்னபாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
முகாமில் க.விலக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், வட்டார மருத்துவ அலுவலர் கோமதி மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்தனர்.