உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

பரமன்குறிச்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-08-29 09:58 GMT   |   Update On 2022-08-29 09:58 GMT
முகாமில் டிஜிட்டல்எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

உடன்குடி:

பரமன்குறிச்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, மருத்துவர்கள் ஆர்த்தி பிரசாத், அஸ்வின், ஜெயபரணி, பிச்சுமணி, சுகாதார ஆய்வாளர்கள் சேதுகுற்றாலம், சேதுபதி, ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுலவலர் அனிபிரிமின் வரவேற்றார்.

முகாமில் டிஜிட்டல்எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

இதில் பள்ளி தாளாளர் ராஜ்குமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News