உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை- மைசூர் இடையே மீண்டும் சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

Published On 2022-10-29 15:07 IST   |   Update On 2022-10-29 15:07:00 IST
  • நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படுகிறது.
  • விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

பாபநாசம்:

மயிலாடுதுறை, பெங்களூர், மைசூர் இடையே மீண்டும் நேற்று முதல் ஒரு வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (ஒரு மாதத்திற்கு மட்டும்) இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண்: 06251: மைசூர் - மயிலாடுதுறை ரெயில் நவம்பர் 4,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படுகிறது.

வண்டி எண்:06252: மயிலாடுதுறை - மைசூர் இன்று (29-ந்தேதி), நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது.

விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

பெங்களூரிலிருந்து பாபநாசத்திற்கு வரும் நேரம் மதியம் 2.00 மணி மற்றும் பாபநாசத்திலிருந்து பெங்களூர், மைசூர் செல்ல புறப்படும் நேரம் இரவு 7.30 மணி ஆகும்.

ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

இத்தகவலை திருச்சிராப்பள்ளி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News