உள்ளூர் செய்திகள்

பொருட்காட்சியை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

தூத்துக்குடியில் மாதா கோவில் பொருட்காட்சி- அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

Published On 2022-07-27 09:17 GMT   |   Update On 2022-07-27 09:17 GMT
  • வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
  • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா கொடியேற்றம் நடைபெற்றது.

அதன் அருகில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொழுதுபோக்கு மேற்கொள்வதற்கும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழாவிற்கு மாதாகோவில் பங்குதந்தை குமாரராஜா ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் பாதர் ஆரோக்கியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், ஓஎல்எஸ் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா, மற்றும் மணி, ராக்கேஷ், பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான ராட்சத விளையாட்டு சாதனங்கள் ராட்டினம் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

Tags:    

Similar News