உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து மேஸ்திரி பலி

Published On 2023-04-01 09:49 GMT   |   Update On 2023-04-01 09:49 GMT
  • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
  • எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பெரிய தள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது43), மேஸ்திரி. இவருக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான விவசாய கிணறு அருகே போகும்போது எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News