உள்ளூர் செய்திகள்

மலையப்ப நகர் கிராமத்தில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆய்வு செய்த காட்சி

குடிநீரை முறைகேடாக மீன் பண்ணைக்கு பயன்படுத்தியவருக்கு அபராதம்

Published On 2023-07-09 15:29 IST   |   Update On 2023-07-09 15:29:00 IST
  • மீன் பண்ணை உரிமையாளர் முறைகேடாக பைப் லைன்கள் அமைத்து மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
  • சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதஹள்ளி ஊராட்சி மலையப்ப நகர் கிராமத்தில் பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என நேற்று முன்தினம் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆப்ரேட்டராக பணிபுரியும் பெண்ணின் மகன் இரண்டு ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தி வரும் மீன் பண்ணைக்கு (குட்டைகள்) நேரடியாக முறைகேடான முறையில் பைப் லைன்கள் அமைத்து தொடர்ந்து ஊராட்சி மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை மீன் பண்ணைக்கு பயன்படுத்தியது காரணம் என பொதுமக்கள் புகார் கூறினர்.

அதனை தொடர்ந்து நேற்று நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் மீன் பண்ணை உரிமையாளர் முறைகேடாக பைப் லைன்கள் அமைத்து மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். மேலும் இந்தத் தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மேலும் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த அளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதற்கான அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளார்.

இந்த ஆய்வின் போது மானியதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, துணை தலைவர் வீரம்மாள் ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி, தொப்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News