உள்ளூர் செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

Published On 2023-01-22 14:45 IST   |   Update On 2023-01-22 14:45:00 IST
  • லைட்டு களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடிக்க முயன்றனர்.
  • வனத்துறை யினா் அவரை கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பனைக்காப்புக்காட்டில் வனச்சரகர் சீத்தாராமன் தலைமையில் வனக்கா ப்பாளர்கள் பெருமாள் மற்றும் பருவதன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது லைட்டு களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை புதரில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.

மற்றொரு ஆசாமியை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் மகன் சக்தி (வயது 22) என்பதும், வன விலங்குகளை வேட்டை யாட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறை யினா் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, பேட்டரி மற்றும் நெற்றி லைட்டுகளை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய வண்ணாத்தப்பட்டியை சேர்ந்த மயில்வாகனன் (48) என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News