உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட வீரப்பன்

காரிமங்கலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-09-11 17:18 IST   |   Update On 2023-09-11 17:18:00 IST
  • காரிமங்கலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
  • ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரி:

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல போலீஸ் கண்காணிப்பாளர் பாலாஜி, மேற்பார்வையில் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டு தல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடத்திய தேடுதல் வேட்டை யில் காரிமங்கலத்தில் மந்தைவீதி கோவிந்தன் மகன் வீரப்பன் என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி சென்ற போது அவரை, பின்தொடர்ந்து சென்றதில் சுமார் ஒரு டன் ரேசன்அரிசி பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் ஒரு டன் ரேசன் அரிசி மற்றும் வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைப்பற்றப்பட்ட 1 டன் ரேசன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.

Tags:    

Similar News