என் மலர்
நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி கடத்தியவர் கைது"
- குடிமை பொருள் வழங்கல் குற்றப்பு–லனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமை–யிலான போலீசார் வாலி–கண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்ஐ ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, நெற்குணம் ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பெரம்பலூர் - வி.களத்தூர் சாலையில் நெற்குணம் சந்திப்பு பகுதி அருகே வி.களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 50 கிலோ எடையுள்ள 30 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அரிசியை கடத்தி வந்தவரிடம் விசாரணை செய்தபோது பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மேலத்தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் கலியபெருமாள் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேனையும், அரிசி மூட்டையும் பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரிமங்கலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
- ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தருமபுரி:
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல போலீஸ் கண்காணிப்பாளர் பாலாஜி, மேற்பார்வையில் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டு தல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நடத்திய தேடுதல் வேட்டை யில் காரிமங்கலத்தில் மந்தைவீதி கோவிந்தன் மகன் வீரப்பன் என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தி சென்ற போது அவரை, பின்தொடர்ந்து சென்றதில் சுமார் ஒரு டன் ரேசன்அரிசி பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் ஒரு டன் ரேசன் அரிசி மற்றும் வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைப்பற்றப்பட்ட 1 டன் ரேசன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.






