உள்ளூர் செய்திகள்

மாலைமலர் செய்தி எதிரொலி- கோத்தகிரியில் மூடப்படாமல் இருந்த குழி இரும்பு கம்பிகள் மூலம் அடைப்பு

Published On 2023-02-04 09:03 GMT   |   Update On 2023-02-04 09:03 GMT
  • சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்தது.
  • மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி காந்திமைதானம் பகுதியில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்த குழியால் விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக கடந்த வாரம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் வாயிலாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த குழியினை இரும்பு கம்பிகள் மூலம் அடைத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News