உள்ளூர் செய்திகள்

மாலைமலர் செய்தி எதிரொலி-பள்ளி முன்பு இருந்த ஆவின் பெட்டிகள் அகற்றம்

Published On 2023-06-25 09:08 GMT   |   Update On 2023-06-25 09:08 GMT
  • ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.
  • பழுது இல்லாத 2 புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது.

குனியமுத்தூர்,

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு அருகே அஷ்ட லட்சுமி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இப்பள்ளியின் எதிரே உள்ள காலி இடத்தில் பழைய ஆவின் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவை அனைத்தும் மழையிலும், வெயிலிலும் காய்ந்து மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டது. ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைகள் விளையாட்டாக அந்த கதவை இழுத்தால் கூட அவை அனைத்தும் சரிந்து விழும் நிலை இருந்து வந்தது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்று பெற்றோர்கள் அச்சமடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

இதுதொடர்பாக மாலைமலர் நாளிதழில் தனியார் பள்ளி முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆவின் பெட்டிகள் அகற்றப்படுமா? என்று செய்தி வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் தற்போது அங்கிருந்த பழைய ஆவின் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. பழுது இல்லாத இரண்டு புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பயமும் இல்லாத நிலை தற்போது நிலவி வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதி மக்களும், பெற்றோர்களும் மாலை மலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

Similar News