உள்ளூர் செய்திகள்

மாலைமலர் செய்தி எதிரொலி: நேதாஜி பூங்கா சீரமைக்கப்பட்டது

Published On 2023-10-08 08:34 GMT   |   Update On 2023-10-08 08:34 GMT
  • ஊட்டி பகுதியில் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதாக செய்தி வெளியானது
  • பூங்காவை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உத்தரவு

ஊட்டி,

ஊட்டி பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் அங்கு நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுதொடர்பாக மாலைமலர் பத்திரிகையில் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி அந்த பூங்காவில் தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

Tags:    

Similar News