உள்ளூர் செய்திகள்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2023-04-12 09:14 GMT   |   Update On 2023-04-12 09:14 GMT
  • கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
  • 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நெல்லை:

மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முக சுந்தரராஜ் நோக்கங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. அரசு பதவியேற்ற பின் வழங்கிய 4 தவணை அகவிலைப்படியை மத்திய அரசுபோல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் நல்லபெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News