கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தபோது எடுத்தப்படம்.
பாறையூர் கிராமத்தில் ஆண்டியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தில் ஆண்டியப்பன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
இந்த விழா நேற்று கணபதி பூஜையுடன்தொடங்கியது. இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹநிதி நடந்தது.
இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாக பண்டிதர்கள்மற்றும் ஊர் கவுண்டர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆண்டியப்பன் சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஆண்டியப்பன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள், ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.