உள்ளூர் செய்திகள்

மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

ரெகுநாதபுரம் உருத்திராபதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Published On 2023-06-02 10:40 GMT   |   Update On 2023-06-02 10:40 GMT
  • திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.
  • பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரா பதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முதல் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.

2 வது நாள் கோ பூஜை, ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், முதல் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது 3வது நாள் 2 -ம் கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து

விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது விழாவில் ரெகுநாதபுரம் பொதுமக்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News