உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.

மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-09 10:05 GMT   |   Update On 2022-09-09 10:05 GMT
  • கோவில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் உள்ள சியாமளாதேவி, மகா காளியம்மன் கோவில் திருப்பணி கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் நடைபெற்று வந்தது.

கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், புத்தூர் கிராம வாசிகள், இளைஞர் மன்றத்தினர் செய்தனர்.

Tags:    

Similar News