உள்ளூர் செய்திகள்

கைதான முனியசாமி

அக்காள்-தம்பியை கடத்திய வாலிபர் கைது

Published On 2022-07-20 08:47 GMT   |   Update On 2022-07-20 08:47 GMT
  • மதுரை அருகே அக்காள்-தம்பியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • அவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகரைச் ேசர்ந்தவர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில், தனது 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரையும் காணவில்லை. முதல் நாள் இரவு 10 மணி வரை வீட்டில் இருந்தனர். அதன் பின்பு இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மவுனம் என்ற முனியசாமி (வயது24) அக்காள் மற்றும் தம்பியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மவுனம் என்ற முனியசாமியை கைது செய்தனர். அக்காள்-தம்பி இருவரும் மீட்கப்பட்டனர்.

கைதான முனியசாமி 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியையும், அவரது தம்பியையும் கடத்திச்சென்றது தெரியவந்தது.

புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து கடத்திச் செல்லப்பட்ட அக்காள் மற்றும் தம்பியை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News