உள்ளூர் செய்திகள்

உலக மாதா கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-05 12:51 IST   |   Update On 2023-06-05 12:51:00 IST
  • உலக மாதா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • உலக மாதா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மேலூர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நாகப்பன்சிவல்பட்டி அதிகார கண்மாய் நடுவே உலகமாதா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க கோபுரத்தில் உள்ள கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

சுற்றுவட்டாரத்தில் உள்ள பூதமங்கலம், ஒத்தப்பட்டி, நெல்லுக்குண்டு பட்டி, மூவன்செவல்பட்டி, கச்சிராயன்பட்டி, கொடுக்கம்பட்டி, மணியம்பட்டி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News