உள்ளூர் செய்திகள்

தொழிலாளி-இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-06-15 08:15 GMT   |   Update On 2023-06-15 08:15 GMT
  • திருமங்கலம் அருகே தொழிலாளி-இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
  • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள எட்டிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள ஆட்டுத் தொழுவத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுந்தரத்தின் மகன் சுந்தரலிங்கம் கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர் அருகே உள்ள பேரையம்பட்டியை சேர்ந்த வர் பாண்டி. இவரது மகள் செல்வி (30). இவர் 9 ஆண்டு களுக்கு முன்பு மெய்ய னூத்தன்பட்டியை சேர்ந்த ராஜாராம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் ராஜா ராம் வௌயூர் சென்றி ருந்தபோது செல்வி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News