உள்ளூர் செய்திகள்

வண்டியூர் கண்மாய் பிரதான கால்வாயில் சிவப்பு நிறமாக மாறிய தண்ணீர்

Published On 2023-08-30 08:38 GMT   |   Update On 2023-08-30 08:38 GMT
  • வண்டியூர் கண்மாய் பிரதான கால்வாயில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது.
  • ஒருவித ரசாயன நெடி வீசுகிறது.

மதுரை

மதுரை நகரில் குடிநீர் ஆதாரமாக மாடக்குளம், வண்டியூர், செல்லூர் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு என தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் கண்மாய் நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு பிரதான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

மேலும் ஒருவித ரசாயன நெடியும் வீசுகிறது. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வகையில் பிரதான கால்வா யில் சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் நிறுவ னங்கள் கழிவுநீரை கலந்ததா? என தெரிய வில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். 

Tags:    

Similar News