உள்ளூர் செய்திகள்

வாக்காளர் சிறப்பு முகாம்

Published On 2022-08-20 13:25 IST   |   Update On 2022-08-20 13:25:00 IST
  • ஆதார் எண்ணுடன் இணைக்க மதுரையில் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

வாக்காளர்கள் www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடி பணியாளர்கள், பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று படிவம் 6B அல்லது கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம், நாளை (21-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

பொதுமக்கள் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை விபரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்பெறலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News