திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம்
- திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
- தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் லதாஜெகன் தலைமையிலும், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் முன்னிலை யிலும் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சங்கர் கைலாசம் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கவுன்சில் கூட்டத்தில்; வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வது, செக்காணூரணி பகுதியில் கொசுத் தொல்லையை கட்டு ப்படுத்துவது, கிராமப்புற ரேசன் கடைகளில் பிரச்சினையாக கைரேகை வைப்பதில் உள்ள குறை பாடுகளை நீக்குதல், மத்திய அரசு வழங்கிடும் அரிசியை முறையாக முறையாக வழங்குதல், மத்திய அரசின் 100நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர் களை இடமாற்றம் செய்வது, செக்காணூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன் சிலர்கள் ஆண்டிச்சாமி, ஓம்ஸ்ரீ முருகன், சிவபாண்டி, மின்னல் கொடி ஆண்டிச் சாமி, பரமன், சிவபிரியா ஆகியோர் கருத்து தெரிவித்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது