உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-06-03 08:16 GMT   |   Update On 2023-06-03 08:16 GMT
  • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
  • திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையத்ைத சேர்ந்தவர் சிவசக்திவேல் (வயது 22), மில் தொழிலாளி. இவர் திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார். சம்பவத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த தன்னுடன் வேலை பார்க்கும் ரஞ்சித்குமார் என்பவருடன் சிவசக்திவேல் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். டி.புதுப்பட்டி ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயம் அடைந்த சிவசக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரஞ்சித்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News