உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-25 09:03 GMT   |   Update On 2023-06-25 09:03 GMT
  • பிறந்தநாள் பார்ட்டிக்கு தந்தை பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருப்பாலை சக்கிமங்கலம் கரந்தமலை நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அய்யனார் (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. இந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அய்யனார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின்தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் சோமஸ் கந்தமூர்த்தி (45). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோமஸ் கந்தமூர்த்தியின் மகள் ஹம்சவாகினி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News