உள்ளூர் செய்திகள்

வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-13 14:09 IST   |   Update On 2023-06-13 14:09:00 IST
  • வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரை தபால்தந்தி நகர் கோமதி அம்மன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் செந்தமிழ்செ ல்வன்(வயது26). இவர் அடிக்கடி மது குடித்தார்.

இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தில் செந்தமிழ்செ ல்வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாங்குடி செங்கோல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன்(35). இவரும் குடிப்பழக்கம் காரணமாக விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News