உள்ளூர் செய்திகள்
- மதுரையில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் திருநகர் தனியார் கிளப் சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது, இதில் 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன. மதுரை நாகனக்குளம் கல்வி குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று முதல் பரிசினை பெற்றனர். ஆட்டநாயகனாக கிரேன் மற்றும் தொடர் நாயகனாகப் பூபதி தேர்வுபெற்று பரிசுகளைப் பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்கள், கால்பந்தாட்ட பயிற்சியாளர் பாலமுருகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரவணபாலாஜி ஆகியோரை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.