உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரையில் சிலம்பம்-வளரி கருத்தரங்கு

Published On 2022-06-28 09:42 GMT   |   Update On 2022-06-28 09:42 GMT
  • மதுரையில் சிலம்பம்-வளரி கருத்தரங்கு நடந்தது.
  • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ் இயல் துறை மற்றும் மருது வளரி சங்கம், இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கேரள மாநிலம், கொழிஞ்சாம் பாறையில் சிலம்பம்- வளரி தொடர்பாக 2 நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது.

இதில் தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவ இயக்குனர் சத்தியமூர்த்தி, இண்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்- மதுரை மருது வளரி சங்க மதுரை மாவட்ட செயலாளர் முத்துமாரி, கொழிஞ்சாம்பாறை பாரதமாதா கல்லூரி முதல்வர் பவுல் தேக்கநாத், பயிற்சியாளர்கள் விஜயன், ரதிஸ், நந்தகுமார், விக்னேஷ்வரன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கேரள மாநில உணவு வழங்கல் கழக மேலாண்மை இயக்குநர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News