உள்ளூர் செய்திகள்

வழிகாட்டி பலகை திறப்பு விழா

Published On 2023-08-27 08:11 GMT   |   Update On 2023-08-27 08:11 GMT
  • உசிலம்பட்டி அருகே வழிகாட்டி பலகை திறப்பு விழா நடந்தது.
  • பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க விழாவினை முன்னிட்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளி வழிகாட்டு பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா துணைத் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் செல்லம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அழகுமாரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை குருநாதன் செய்திருந்தார்.

Tags:    

Similar News