உள்ளூர் செய்திகள்
- மதுரையில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சோதனை நடத்தினார்.
மதுரை
மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் எழுத்தாணிக்கார தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த 2,229 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வில்லாபுரம் சக்திவேல் நகரைச் சேர்ந்த அசோக்குமார் (51) என்பவரை கைது செய்தனர்.