உள்ளூர் செய்திகள்

 மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி ஒரு மாணவிக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கினார். அருகில் கலெக்டர் அனிஷ் சேகர் மற்றும் பலர் உள்ளனர்.

538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை

Published On 2022-09-05 14:16 IST   |   Update On 2022-09-05 14:16:00 IST
  • மதுரையில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் விழா நடந்தது.
  • 538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

மதுரை

'தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு, உயிர் கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இன்று ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 'புதுமைப்பெண்' தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 538 மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கி, தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News