உள்ளூர் செய்திகள்

கைதான 3 பேர்.

ரூ. 57 லட்சம் மோசடி: பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது

Published On 2022-12-30 09:41 GMT   |   Update On 2022-12-30 09:41 GMT
  • பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ரூ. 57 லட்சம் வரை பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

மதுரை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:-

மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தனர். இதற்கான பணத்தை அவர்கள் பல ஆண்டுகளாக செலுத்த வில்லை.

அந்த வகையில் பாரதி சரவணன் குடும்பத்தினர் ரூ. 57 லட்சம் வரை தர வேண்டியுள்ளது. நாங்கள் பணத்தை கேட்டோம். அதற்கு அவர்கள், 'அதோ தருகிறோம், இதோ தருகிறோம்' என்று கூறி அலைகழித்தனர். இந்த

நிலையில் எனது கணவர் கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக, கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நான், எனது தந்தை பெரியசாமி, தாய் ராஜேஸ்வரி, பெரியம்மாள் ராமலட்சுமி ஆகிய 3 பேரும் மதுரைக்கு வந்தோம்.

பாரதி சரவணன் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 57 லட்சத்தை கேட்டோம். அவர்கள் தர மறுத்தது மட்டுமின்றி, அவதூறாக பேசினர். இதை எனது தந்தை தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி, உறவினர் குட்டி கார்த்திக் ஆகிய 4 பேரும் எங்களை உருட்டு கட்டையால் தாக்கினர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான உறவினர் குட்டி கார்த்திக்கை போலீ சார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News