உள்ளூர் செய்திகள்

மோசடி

வெளிநாட்டில் வேலைபார்த்தவரிடம் ரூ4.20 கோடி மோசடி

Published On 2022-06-09 10:32 GMT   |   Update On 2022-06-09 10:32 GMT
  • வெளிநாட்டில் வேலைபார்த்தவரிடம் ரூ4.20 கோடி மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • மதுரையில் தொழில் தொடங்கும் ஆசை ஏற்பட்டது.

மதுரை

மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மதுரையில் தொழில் தொடங்கும் ஆசை ஏற்பட்டது.

இந்த நிலையில் கப்பலூர் டிராவல்ஸ் சீர்க்காழியை சேர்ந்த வாஞ்சிநாதன் (35), அவரது மனைவி கீர்த்தனா, தந்தை சீர்காழி பிரகாசம் மற்றும் இளநாதன் ஆகியோர் ரவியை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழகம் முழுவதும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கினால் அதன் மூலம் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பிய ரவி, அவர்களிடம் ரூ. 4 கோடியே 20 லட்சம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட அவர்கள், கூறியபடி டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க ரவிக்கு உதவ வில்லை. அதுபற்றி கேட்ட போது விரைவில் தொடங்கி விடுவோம் என்று கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.

4 பேர் மீது வழக்கு

இதனால் சந்தேகமடைந்த ரவி, தனக்கு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஆர்வம் இல்லைஎன்று கூறி, தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வாஞ்சிநாதன் உள்ளிட்டோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் 4 பேரும் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சி யடைந்த ரவி, தன்னிடம் பணம் மோசடி செய்தது பற்றி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வாஞ்சிநாதன், அவரது மனைவி கீர்த்தனா, தந்தை சீர்காழி பிரகாசம் மற்றும் இளநாதன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர்.

மோசடி புகார் தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News