உள்ளூர் செய்திகள்
- நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
- கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
மதுரை
மதுரை புட்டு தோப்பு சொக்கன்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 45). இவர் அங்குள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜன் தூத்துக்குடியில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் மதுரைக்கு திரும்பினார்.
அவர் புட்டுத்தோப்பு மெயின் ரோடு ஒயின்ஷாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக பாண்டியராஜன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.