- அ.தி.மு.க. பொன்விழா பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.-நடிகர் வையாபுரி பேசுகிறார்கள்.
- நிலையூரில் இன்று மாலை நடக்கிறது.
மதுரை
மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.
பொதுக்கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிைல வகிக்கிறார்.
ராஜன்செல்லப்பா-வையாபுரி
பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் வையாபுரி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் தெரிவித்துள்ளார்.