உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும்

Published On 2023-01-10 13:30 IST   |   Update On 2023-01-10 13:30:00 IST
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
  • பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News