உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண் மாயம்

Published On 2022-12-18 09:10 GMT   |   Update On 2022-12-18 09:10 GMT
  • கர்ப்பிணி பெண் மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை

மதுரை பெத்தானியாபுரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (19). இருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. கர்ப்பிணியான சிவரஞ்சனி கடந்த 7-ந்தேதி இரவு தனது அண்ணன் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கணவர் கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News