உள்ளூர் செய்திகள்

சீனியம்மாள்

வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2022-07-11 07:40 GMT   |   Update On 2022-07-11 07:40 GMT
  • உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
  • இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70).

இவர் அேத பகுதியில் உள்ள கல்லூரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சீனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News