உள்ளூர் செய்திகள்

2 பெண்களிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள்

Published On 2023-04-30 08:32 GMT   |   Update On 2023-04-30 08:32 GMT
  • மதுரையில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை கோரிப்பாளை யம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதி யில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ரேகா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மதுரை கருப்பாயூரணி, மீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சசிரேகா (46). இவர் நேற்று இரவு மோட் டார் சைக்கிளில் கோமதி புரத்துக்கு சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள் சசிரேகா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது பற்றி சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்பது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News