உள்ளூர் செய்திகள்

தியாகிகள் நினைவுதினம் பொதுக்கூட்டம்

Published On 2022-06-27 09:13 GMT   |   Update On 2022-06-27 09:13 GMT
  • மதுரை புதூரில் தியாகிகள் நினைவுதினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
  • காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது.

மதுரை

அலங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மதுரை ஐகேர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு தியாகிகளின் 25-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி திருமாவளவன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இதற்காக காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மருத்துவமனை நிறைந்த பகுதியாக இருப்பதாக கூறி மனுவை நிராகரித்தனர்.

பின்னர் மதுரை மாநகரில் ஏதேனும் ஒரு பகுதியை காவல்துறையினரை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனு அளித்தோம். அந்த மனு மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருகிற 30-ந் தேதி மேல வளவு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை புதூரில் பொதுக்கூட்டம் நடத்த மாநகர காவல் ஆணையர் நேற்று அனுமதி வழங்கி உள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News