உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.ஷா

தடய அறிவியல் துறையில் தடம் பதித்த அன்னை பாத்திமா கல்வி நிறுவனம்

Published On 2023-06-08 14:20 IST   |   Update On 2023-06-08 14:20:00 IST
  • அன்னை பாத்திமா கல்வி நிறுவனம் தடய அறிவியல் துறையில் தடம் பதித்துள்ளது.
  • அதிக சம்பளத்தில் பணி செய்வது இக்கல்வி நிறுவனத்திற்கு மகுடம்.

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்வி நிறுவனம் பல ஆண்டுகளாக கல்வியில் தனி முத்திரை பதித்து வருகிறது.

தென் தமிழகத்தில் மாணவர்களுக்கு உலகத்தர மான கல்வி வழங்கும் நிறுவனம் இது. மாநில அரசின் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற இந்நிறுவ னம் பல்வேறு தொழில் சார்ந்த மேலாண்மை பட்ட, பட்ட மேற்படிப்புகளை வழங்குவதுடன், உடனடி யாக வேலை வாங்கி கொடுப்பதிலும் தென் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.

இங்கு பல்வேறு மாநிலங் கள், வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து பட்டம் முடித்து, வேலையும் பெற்றுச்செல்வது சிறப்புக்குறியது. கல்வியுடன் ஒழுக்கம், பேதம் நீக்கி, ஒற்றுமை உருவாக்க மாண வர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளருக்கும் சீருடைகளை வழங்கி கவுரவிக்கிறது.

மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கப்பல், விமானம், தேசிய வங்கிகள், ஐந்து நட்சத்திர உணவகம் மற்றும் ரிசார்ட்ஸ் போன்றவற்றில் பணி யாற்றும் அளவுக்கு திற மையை வளர்த்து, வளாகத்தேர்வு மூலம் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆண்டுதோறும் 40 முதல் 50 நிறுவனங்கள் இங்கு வளாக நேர்முக தேர்வுக்கு (Campus Interview) வருவது கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

தற்போது வேலை வாய்ப்பு பெருகி இருப்பதை மனதில் கொண்டு தடய அறிவியல் துறையின் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பும் மதுரை காமராஜர் பல்கலை அங்கீகாரத்துடன் நடத்தப் படுகிறது.

இவை மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணினி அறிவியல், வணிகவியல், கணிதம், ஓட்டல் நிர்வாகம், குற்றவியல், சுற்றுலா, உணவகம், விமானம், மருத்துவம் போன்ற துறைகள் இங்கு நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனம், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாணவரின் பெற்றோர் வந்தால் நட்சத்திர சிற்றுண்டி வசதி, விளையாட்டுக்கூடம், வகுப்பறை, குளிர்சாதன வசதியுடன் பயிற்சி கூடம், தமிழக, கேரள, வெளிநாட்டு உணவு என 3 வித உணவு முறை வழங்குவது இந்நிறுவனமே. இங்கு மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது. இங்கு பயின்றவர்கள் முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணி செய்வது இக்கல்வி நிறுவனத்திற்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.

Tags:    

Similar News