உள்ளூர் செய்திகள்

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைப்பு

Published On 2023-02-03 07:49 GMT   |   Update On 2023-02-03 07:49 GMT
  • வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்படும்.
  • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ''வள்ளலார் நினைவு தினம்'' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் 5-ந்தேதி அன்று மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5-ந் தேதி மதுபான சில்லரை விற்பனையும் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News