உள்ளூர் செய்திகள்

சிறுத்தை நடமாட்டம்; 5 ஆடுகளை அடித்து கொன்றது

Published On 2023-11-23 06:47 GMT   |   Update On 2023-11-23 06:47 GMT
  • பேரையூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது.
  • சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.


திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிர மணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டால் சிறுத்தையா? அல்லது வேறு ஏதும் மிருகமா? என தெரியவரும்.

சிறுத்தை வந்திருந்தால் அதனை காட்டுப் பகுதிக் குள் விரட்ட வேண்டும் எனவும் அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதி யில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News